Tirukural

திருக்குறள்

பெண்வழிச் சேறல்

901. §

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
§

902. §

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணூத் தரும்.
§

903. §

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
§

904. §

மன்னையானை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
§

905. §

இல்லாலை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
§

906. §

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
§

907. §

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
§

908. §

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
§

909. §

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண் ஏவல் செய்வார்கண் இல்.
§

910. §

எண்சேர்ந்த நெச்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
§