Tirukural

திருக்குறள்

நட்பு ஆராய்தல்

791. §

நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
§

792.§

ஆய்ந்தாய்த்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
§

793. §

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
§

794. §

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
§

795. §

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நட்பு ஆய்ந்து கொளல்.
§

796. §

கேட்டினும் உண்டோர் உருதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
§

797. §

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
§

798. §

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பர்ர் நட்பு.
§

799. §

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்.
§

800. §

மருவுக மாசற்றார் கேண்மைஓன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
§