Tirukural

திருக்குறள்

குறிப்பறிதல்

701. §

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
§

702. §

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
§

703. §

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறிப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
§

704. §

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
§

705. §

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
§

706. §

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
§

707. §

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
§

708. §

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துண்ர்வார்ப் பெறின்.
§

709. §

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
§

710. §

துண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லாது இல்லை பிற.
§