Tirukural

திருக்குறள்

மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

691. §

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
§

692. §

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.
§

693. §

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
§

694. §

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
§

695. §

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
§

696. §

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
§

697. §

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
§

698. §

இளையார் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
§

699. §

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
§

670. §

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
§