Tirukural

திருக்குறள்

தூது

681. §

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
§

682. §

அன்பறிவு ஆராய்ந்து சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
§

683. §

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
§

684. §

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறியுடையான் செல்க வினைக்கு.
§

685. §

தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
§

686. §

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
§

687. §

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
§

688. §

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
§

689. §

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.
§

690. §

இருதி பயப்பினும் எஞ்சாது இறைவர்க்கு
உறுதி பயப்பதாம் தூது.
§