Tirukural

திருக்குறள்

ஊக்கம் உடைமை

591. §

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
§

592. §

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
§

593. §

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
§

594. §

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
§

595. §

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
§

596. §

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
§

597. §

சிதைவிடதது ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டுன்றுங் களிறு.
§

598. §

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
§

599. §

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
§

600. §

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃதில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
§