Tirukural

திருக்குறள்

ஒற்றாடல்

581. §

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
§

582. §

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
§

583. §

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
§

584. §

வினைசெய்வார் தமசுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
§

585. §

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
§

586. §

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செய்னும் சோர்விலது ஒற்று.
§

587. §

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
§

588. §

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
§

589. §

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
§

590. §

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யாற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
§