Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

காலம் அறிதல்

481. §

பகற்பொழுதில் காக்கை ஆந்தையும் வெல்லும். அவ்வாறே தன் பகைவரை வெற்றி கொள்ள விரும்பும் அரசன் பொருத்தமான நேரத்தைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.§

482. §

தக்க காலநேரம் அறிந்து அதற்கு ஏற்ப செயலாற்றுதல் செல்வமானது அழிந்து போகாது கட்டி வைக்கும் கயிறு போன்றதாகும்.§

483. §

உரிய காலத்தில் உவந்த கருவி கொண்டு எக்கருமத்தையும் பயன் தரும்படி செய்பவர்க்கு செய்வதற்கு அரிதான பணி எதுவும் உளதோ?§

484. §

தக்க காலமும் பொருத்தமான இடமும் அறிந்து செயலாற்றின் உவகத்தையே பெற விரும்பினும் அது கட்டாயம் கைகூடும்.§

485. §

இவ்வுலகையே தமதாக்க விரும்புவோர் மனங்கலங்காது தக்க தருணம் பார்த்துப் பொறுத்திருத்தல் வேண்டும்.§

486. §

வலிமை மிக்க மனிதன் தக்க தருணம் பார்த்துப் பொறுமையுடன் காத்திருத்தல், ஆட்டுக்கடா தன் எதிரியைத் தாக்க முன்
பின்வாங்கிக் காலெடுத்து வைப்பது போலாகும்.
§

487. §

தெளிவான அறிவுள்ளோர் பகைவர் தவறு செய்யினும் கடுங்கோபங் கொண்டு சீறிச் சினக்கமாட்டார். வெற்றி கொள்வதற்குத் தகுந்த காலம் வரும் வரையும் தம் கோபத்தை உள்ளடக்கி வைத்திருப்பர்.§

488. §

எதிரியைச் சந்திக்கும் போது கோபத்தை வெளிக்காட்டாது சிரந்தாழ்த்திப் பணிவுடன் நடந்து கொள்க. காலப் போக்கில் அவர் தோல்வி கண்டு வெட்கத்துக்காளாகித் தாமே தலை குனிந்து நிற்பர்.§

489. §

கிடைத்தற்கரிய வாய்ப்புக் கிடைக்கும் போது செய்து முடிக்காத காரியங்களை அக்கணமே செய்து விடுக.§

490. §

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரையும் பொறுமையுடன் காத்திருக்கும் கொக்குப் போன்று தக்கதருணம் வரும் போது சிரந்தாழ்த்திப் பணிவாக நடந்து கொள்க.§