Tirukural

திருக்குறள்

காலம் அறிதல்

481. §

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
§

482. §

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
§

483. §

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
§

484. §

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
§

485. §

காலம் கருதி இருப்பவர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
§

486. §

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
§

487. §

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
§

488. §

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
§

489. §

எய்தற் கரியதுற இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
§

490. §

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
§