Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கேள்வி

411. §

செவிவழி கேட்டறியும் கல்விச் செல்வமே மதிப்புடையது. அச்செல்வம் மற்றெல்லாச் செல்வங்களுள்ளும் தலையானது.§

412. §

அறிவு தரும் கருத்துக்களைக் கேட்டறிய வாய்ப்பில்லாத வேளையில் மட்டுமே வயிற்றுக்கும் ஒரு கவளம் உணவு வழங்கப்படும்.§

413. §

செவிக்குணவாகிய கேள்வியறிவு பெறும் இம்மண்ணவர் வேள்வியில் அவியுணவு பெறும் விண்ணவரோடு ஒப்பர்.§

414. §

ஒருவன் கற்காவிடினும் கற்றோர் சொல்லைக் கேட்ட அறிவாவது பெற்றிருப்பின் அது கெடுதி வருங்கால் ஊன்று கோல் போல் உறுதி தரும்.§

415. §

நேர்மையுள்ள பெரியோர் கூறும் அறிவுரைகள் வழுக்கல் நிலத்தில் ஊன்று கோல் போல் உறுதி தரும்.§

416. §

சிறியனவாயினும் சிறந்த கருத்துக்களைப் பெரியோர் வாய்க் கேட்டுணர்க. அத்துணை கேள்வியறிவோ மிகுந்த பெருமை வளர்க்கும்.§

417. §

ஆழ்ந்த கல்வியறிவும் நற்கேள்வியறிவும் உடையோர் தவறாக உணர்ந்த எப்பொருள் பற்றியும் அறியாமை பயக்கும் சொற்களையும் பேசமாட்டார்.§

418. §

நுண்ணிய கேள்வியறிவு ஊடுருவிச் செல்லப் பெறாத செவி பிற ஒலிகளைக் கேட்பினும் அது செவிடேயாம்.§

419. §

கல்வி தரும் அறிவை நுணுக்கமாகக் கேட்டறிந்தவர்க்கன்றி பணிவுடன் உரையாடும் சொல் வருதல் அரிது.§

420. §

கேள்வியறிவுச் சுவையுணராது நாச்சுவை மட்டுமே உணருகின்றவர் இருந்தென்ன? இறந்தென்ன?§