Tirukural

திருக்குறள்

கேள்வி

411. §

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
§

412. §

செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்.
§

413. §

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
§

414. §

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவதற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
§

415. §

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
§

416. §

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
§

417. §

பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
§

418. §

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
§

419. §

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
§

420. §

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
§