Tirukural

திருக்குறள்

நிலையாமை

331. §

நில்லா வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
§

332. §

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
§

333. §

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
§

334. §

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது ஊணர்வார்ப் பெறின்.
§

335. §

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
§

336. §

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
§

337. §

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
§

338. §

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
§

339. §

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
§

340. §

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
§