Tirukural

திருக்குறள்

கள்ளாமை

281. §

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
§

282. §

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
§

283. §

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
§

284. §

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
§

285. §

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
§

286. §

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
§

287. §

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
§

288. §

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
§

289. §

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
§

290. §

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளர்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.
§