Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

தவம்

261. §

தமக்கு வருந் துன்பங்களைச் சகித்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையுமே தவத்துக்கு இயல்பு.§

262. §

இயல்பாக நன்னெறியிற் சென்றவர்களே தவம் மேற்கொள்ளல் கூடும். அப்படி இல்லாதவர் தவம் செய்ய முற்படுவது வீண்.§

263. §

தவம் செய்கின்றவருக்கு வேண்டுவன கொடுத்து உதவுதற்காகவே இல்லறத்தார் தவம் செய்யாது இருக்கின்றனரோ?§

264. §

பகைவர்களை ஒழித்தலும் நண்பர்களை வளர்த்தலும் தவம் செய்வாரின் தவ பலத்தாற் கைகூடும்.§

265. §

தவத்தால் தாம் விரும்பியவற்றைத் தவறாது பெற முடியுமென்ற நம்பிக்கையால் இவ்வுலகில் மனிதர் தவம் செய்தலை விடாது முயல்கின்றனர்.§

266. §

தவம் செய்பவரே தம் கர்ம வினைப்படி ஒழுகுபவராவர். ஏனையோர் உலகின்ப ஆசை வலைப்பட்டு வீணாகச் செயற்படுவர். §

267. §

நெருப்பில் உருக்கிய பொன் பேரொளி பெறுவது போல கடுமையான தவ ஒழுக்கந் தருந் துன்பத்தினால் தபசியின் ஆன்மா தூய்மையடையும்.§

268. §

ஒருவன் தன் தவ ஒழுக்கத்தால் ஆன்மஞானம் பெற்றவனாக அவனை மற்றெல்லா உயிர்களும் வணங்கும்.§

269. §

தம்மை வருத்தித் தவ ஒழுக்கத்தில் ஈடுபட்டுப் பெற்ற ஆற்றலினால் தபசியர் மரணத்தையும் வெல்லக் கூடியவராவர்.§

270. §

விரதம் அனுட்டிப்பவரும் தீமை இழைக்காதவரும் ஒருசிலராகவும் அவ்வாறு ஒழுகாதார் பலராகவும் இருத்தலினால் பலர் ஆன்மஞானம் அற்றவராய் வருந்துவர்.§