Tirukural

திருக்குறள்

தவம்

261. §

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
§

262. §

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
§

263. §

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
§

264. §

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
§

265. §

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
§

266. §

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
§

267. §

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
§

268. §

தன்னுயிர் தான் அறப் பெற்றுனை எனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
§

269. §

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றம் தலைப்பட்டவர்க்கு.
§

270. §

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
§