Tirukural

திருக்குறள்

ஈகை

221. §

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
§

222. §

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
§

223. §

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
§

224. §

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
§

225. §

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
§

226. §

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
§

227. §

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
§

228. §

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
§

229. §

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
§

230. §

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
§