Tirukural

திருக்குறள்

அறன்வலிறுத்தல்

31. §

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறந்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
§

32. §

அறந்தினூஉங்கு ஆக்கம் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
§

33. §

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
§

34. §

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற.
§

35. §

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
§

36. §

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
§

37. §

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
§

38. §

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
§

39. §

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
§

40. §

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
§