Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

துறவியர் பெருமை

21. §

மற்றெல்லாவற்றிலும் மிக உயர்வாக வேத நூல்கள் கூறுவது அறவழி வாழ்ந்து துறந்தார் தம் மகிமையையே.§

22. §

துறவியரின் பெருமையை எடுத்துக் கூற முயலின், அஃது இவ்வுலகில் வாழ்ந்து மடிந்தோரைக் கணக்கிடலை ஒக்கும்.§

23. §

இயற்கையில் சேர்ந்தே நிகழும் வாழ்தலும் மாளலும் போன்ற இரு தன்மைகளையும் சீர்தூக்கி நோக்கின் துறவு மேற்கொண்டோர் பெருமையினால் இவ்வுலகம் விளக்கமுறுகின்றது.§

24. §

புத்தி எனும் துறட்டியினால் ஐம்புலனடக்கி ஆளும் மனவுறுதியுடையவன் விண்ணுலகில் விளையும் வித்து ஆவான்.§

25. §

ஐம்புலனடக்கியோர் ஆற்றலோ மிகப் பெரிது விண்பேருலகின் வேந்தனாம் இந்திரன் தானும் அன்னார் சாபத்திற்கு ஆளாயினான்.§

26. §

பெரியோர் மற்றையோர் செய்ய முடியாதவற்றையும் செய்து முடிப்பர் சிறியோர் அங்ஙனம் செய்ய வல்லாரல்லர்.§

27. §

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களையும் கட்டுப்படுத்த வல்லானே உலக இன்பங்களையும் கட்டுப்படுத்த வல்லான்.§

28. §

மறைமொழி உண்மையை வெளிப்படுத்தலால் அதனைக் கூறும் முன்னுணர்வோர் பெருமையும் உணரப்படும்.§

29. §

குணம் எனும் மாமலையில் ஏறி நிற்கும் துறவியரின் கோபத்தைக் கணநேரமும் பொறுக்கமுடியாது.§

30. §

எல்லா உயிரினத்திலும் கருணை காட்டி வாழ்தலால் துறவியர் அந்தணர் எனப்படுவர்.§