Tirukural

திருக்குறள்

நீத்தார் பெருமை

21. §

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
§

22. §

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
§

23. §

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூ ண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
§

24. §

உரனென்னும் தோட்டியான் ஒரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
§

25. §

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
§

26. §

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
§

27.§

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
§

28. §

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
§

29. §

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
§

30. §

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
§