Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

வறுமை

1041. §

ஒருவனுக்கு வறுமை போல் கொடியது என்ன என்று கேட்டால் வறுமை போல் கொடியது வறுமையே வேறு ஒன்றுமில்லை.§

1042. §

வறுமை எனும் கொடும்பாவி ஒருவன் இப்பிறவியிலும் மறு பிறவியிலும் ஒரு இன்பமும் பெறாமல் தடுத்துவிடும்.§

1043. §

வறுமை எனும் தீராத ஆசை தொன்று தொட்டு வந்த குலப் பெருமையையும் பேச்சின் பெருமதிப்பையும் ஒருங்கே கெடுத்து விடும்.§

1044. §

பெருங் குடியிற் பிறந்தவரிடத்தும் வறுமை எனும் நோய் இழிவான பேச்சையும் சோம்பலையும் கொடுக்கும்.§

1045. §

வறுமை என்னும் ஒரு துன்பமே பலவிதக் கொடுமைகளையும் கொண்டு வந்து சேர்த்து விடும்.§

1046. §

சிறந்த கருத்துக்களை உணர்ந்து சீராக எடுத்துரைத்தாலும் வறியவர் கூறும் விளக்கம் பயனில்லாது முடியும்.§

1047. §

வறுமையில் அகப்பட்டு அறநெறியில் தவறுபவனைப் பெற்று எடுத்த தாயும் அந்நியனாகக் கருதுவாள்.§

1048. §

நேற்று என்னைக் கொல்லும் அளவுக்கு வந்த வறுமை இன்றும் வந்திடுமோ? என் செய்வேன்.§

1049. §

சுட்டெரிக்கும் நெருப்பிலும் நித்திரை செய்யலாம். ஆனால் வறுமையின் கொடுமையில் எவரும் கண்ணயர முடியாது.§

1050. §

ஒரு கவளம் சோறும் இல்லாதார் ஆசைகளை அறவே துறக்க வேண்டும். அல்லது அயலார் கஞ்சியையும் உப்பையும் குடிக்க வேண்டும்.§