1021. § | எடுத்த கருமங்களை நிறைவேற்ற இடையறாது உழைப்பேன் என உறுதியோடு கூறி அவ்வாறு நடப்பதைப் போல் பெருமை கொடுப்பது வேறெதுவும் இல்லை.§ |
1022. § | விடா முயற்சியும் ஆழ்ந்த அறிவும் கொண்டு சலியாது உழைப்பவன் குடி உயர்ந்து சிறப்படையும்.§ |
1023. § | தன் குலம் தழைத்தோங்க ஒருவன் உறுதி கொண்டால் தெய்வம் தானே வரிந்து கட்டிக் கொண்டு வந்து நின்று உதவி செய்யும்.§ |
1024. § | தன்குலம் மேலும் உயர ஓயாது உழைப்பவனின் முயற்சி அவனே திட்டம் ஏதும் வகுத்திராவிடினும் தானே நிறைவு பெறும்.§ |
1025. § | குற்றம் செய்யாது தன் குலம் உயர வாழ்பவனை உலகில் வாழ்வோர் தம் சுற்றமாகத் தேர்ந்து கொண்டாடுவர்.§ |
1026. § | தான் பிறந்த குலத்திற்கு வழிகாட்டித் தலைமை ஏற்று வாழ்தலே உண்மையான ஆண்மையுடைமை ஆகும்.§ |
1027. § | போர்க்களத்தில் நடப்பது போலவே மக்கள் குலத்திலும் ஆற்றல் மிக்காரெ பொறுப்பு எடுத்துச் செயல் புரிவர்.§ |
1028. § | தம் குலத்தின் உயர்வுக்கு உழைப்பவர் நேர காலம் வரக் காத்திருப்பது இல்லை. தம் மதிப்பைப் பெரிதாகக் கருதி காலம் தாழ்த்துவதால் குலத்தின் பெருமை அழியும் என்று அவர் அறிவர்.§ |
1029. § | தன்குடும்பத்துக்கு வரும் துன்பங்களைத் தடுத்துக் காப்பவன் உடல் துன்பத்துக்கே இருப்பிடம் ஆகிறது அல்லவோ?§ |
1030. § | ஒர குடும்பத்தைக் காக்க வல்ல நல்லவர் இல்லாமல் போனால் துன்பம் வந்து சாடும் போது அக் குடும்பமே மாழ்கி மடிந்து விடும்.§ |