Tirukural

திருக்குறள்

நாண் உடைமை

1011. §

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
§

1012. §

ஊணுடை எச்சம் உயர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
§

1013. §

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
§

1014. §

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
§

1015. §

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
§

1016. §

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
§

1017. §

நாணால் உயிரைத் துறப்பார் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
§

1018. §

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
§

1019. §

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
§

1020. §

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயர்மருட்டி அற்று.
§