Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பெருமை

971. §

வாழ்வுக்கு ஒளி தருவது புகழ் பெறத் தூண்டும் ஊக்கமாகும். அது போல இழிவு தருவது எமக்கு அது வேண்டாம் எனும் பிழையான எண்ணமாகும்.§

972. §

உலகில் வாழும் யாவரும் பிறக்கும் போது சமமே. அதன் பின் அவருடைய மாறுபட்ட செயல்களே அவர்களிடம் காணும் வேற்றுமையையும் சிறப்பையும் சுட்டிக் காட்டும்.§

973. §

அற்பர் மேல் நிலையில் இருப்பினும் உயர்ந்தவர் ஆகார். பெருமைக்குரியோர் கீழ் நிலையில் இருந்தாலும் இழிந்தவர் ஆக மாட்டார்.§

974. §

கற்பு நெறி வழுவாத கன்னிகை போல, பண்புடைய ஒழுக்கத்தில் இருந்து தவறாது வாழ்ந்தே பெருமையைக் காக்க முடியும்.§

975. §

செயற்கரிய செயல்களைச் செயல் திறனோடு செய்யும் ஆற்றலைப் பெருமை உடையோர் பெற்றிருப்பர்.§

976. §

பெரியோரைச் சேர்ந்து அவர் போல் பெரியவர் ஆவோம் என்பது போன்ற நல்ல எண்ணங்கள் சிறியோர் மனதில் படுதல் அரிது.§

977. §

பெருமை தரும் உயர் நிலையை சிறுமை மனம் படைத்தோர் அடைந்தால் அது அவர் ஆணவத்தையே அதிகமாக்கும்.§

978. §

பெருமை மனம் படைத்தோர் பணிவுடன் நடந்து கொள்வர். சிறுமைக் குணம் உடையோர் தம்மைத் தாமே புகழ்ந்து கொள்வர்.§

979. §

செருக்கு இல்லா இடத்தில் பெருமை அமைந்திருக்கும், சிறுமை தன் செருக்கை யாவருக்கும் வீண் பெருமையுடன் எடுத்துக் கூறும்.§

980. §

பிறரிடம் காணும் குறைகளைப் பண்பு உடையவர் எடுத்துக் கூறுவது இல்லை. சிறுமை கொண்டவர் அவை யாவற்றையும் உடனே எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுவர்.§