Tirukural

திருக்குறள்

சூது

931. §

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
§

932. §

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
§

933. §

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
§

934. §

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவெதொன்று இல்.
§

935. §

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
§

936. §

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
§

937. §

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
§

938. §

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
§

939. §

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
§

940. §

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
§