Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

விலைமாதர்

911. §

ஒருவனின் அன்பையன்றி செல்வத்தையே நாடும் நகை அணிந்த விலைமாதரின் இனிய பேச்சு அவனுக்கு இகழ்ச்சியையே கொண்டு வரும்.§

912. §

தாம் பெறும் செல்வத்தின் அளவு கொண்டு அதற்கு ஏற்ப சொற்களைப் பேசும் நற்குணமற்ற விலைமாதர் தரும் சுகத்னதச் சிந்தித்து அவர்களைச் சேராது விடுக.§

913. §

பண்த்னத மட்டுமே விரும்பும் விலைமாது பாசாங்கு பண்ணித் தழுவுதல் இருட்டறையில் தொடர்பில்லாத பிணத்தை தழுவுவதற்குச் சமமாகும்.§

914. §

பகட்டாக உடுத்துப் பணம் மட்டுமே கருதும் மாதரை அருள் நாடும் மாந்தர் தொடவும் எண்ண மாட்டார்.§

915. §

மதி நுட்பத்தினால் சிறந்து விளங்கும் அறிவாளிகள் யாவருக்கும் பொதுவாகவுள்ள விலை மாதரின் சுகத்தை நாட மாட்டார்.§

916. §

அழகிய கலைகளை இழிவான முறையில் பயன்படுத்தி மக்களைக் கவரும் மாதரைத் தம் நல்ல பண்பாட்டைப் பேணி வருவோர் சேர மாட்டார்.§

917. §

நெஞ்சில் பிறவற்றில் கண் வைத்துத் தம் உடலை விற்கும் பொது மகளிரைத் தம் மனதை அடக்கும் அற்றல் இல்லாதவரே கட்டி அணைப்பர். §

918. §

மாயமாலம் செய்து அணைக்கும் மகளிர், அவ்வஞ்சனையை உணர அறிவில்லாதவர்க்கு உயிர் பறிக்கும் மோகினி அவர்.§

919. §

அழகிய ஆபரணங்கள் அணிந்த விலைமாதரின் மென்மையான தோள்கள் எளிய மூடர் மூழ்கி மாளும் சதுப்பு நிலமாகும்.§

920. §

உடலால் தழுவி மனத்தால் உணர்ச்சி அற்ற இரு மனமுள்ள மாதர், மயக்கும் கள், வஞ்சகச் சூது எனும் இவை மூன்றையும் திருமகளால் விலக்கப்பட்டவரே தொடர்பு கொள்வார்.§