Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

நட்பு

781. §

நட்பைப் போல் பெறுவதற்கு அரியது எது? அதுபோல் பகைவருக்கு எதிராகப் பாதுகாப்பு தருவது எது?§

782. §

அறிஞர்களுடன் நட்பு வளர்பிறை போல் வளரும், மூடர்களுடன் அது பூரண சந்திரன் தேய்வது போல் தேயும்.§

783. §

நன்நூல்களைப் படிக்கப் படிக்க சிந்தனைக்கு இனிய புதிய கருத்துகள் தோன்றும், நல்லோருடன் இணைந்த பிணைப்பு பழகப் பழக மகிழ்ச்சி தரும்.§

784. §

நட்புப் பூணுவது சிரித்து மகிழ்வதற்காக அன்று, நண்பன் தீய வழியில் செல்லுங்கால் முன் நின்று கடுஞ் சொல்லால் கண்டிப்பதற்கே.§

785. §

நட்பு நிலைத்திருக்க இடையறாது உறவாடுவதும் பழகுவதும் வேண்டியதில்லை. ஒருமித்த விருப்பங்களே இறுகச் சேர்க்கும் நட்பை அளிக்கும்.§

786. §

சிரிக்கும் முகம் மட்டுமே நட்பை உறுதியாகக் காட்டும் குறியன்று, அன்பின் விழைவால் வரும் உள்ளப் பூரிப்பே அதற்கு அடிப்படையாகும்.§

787. §

நண்பன் தீய வழியில் செல்லுங்கால் தடுத்து நல்வழிப் படுத்தி, அவனுக்குத் துன்பம் வந்துறும் போது பங்கு கொள்வதே நட்பாகும்.§

788. §

இடுப்பில் உடை நெகிழ்ந்தால் ஒருவன் கை உடனே சென்று காப்பது போல் நண்பனுக்குத் துன்பம் வந்தபோது உடனே சென்று உதவுவதே நட்பாகும்.§

789. §

நட்பு எனப்படுபவது எங்கு கொலு வீற்றிருக்கும் நண்பர்கள் எந்நிலையிலும்எப்பொழுதும் எவ்விடத்தும் ஆதரவு பெறும் இடமாம் அது.§

790. §

"இவர் எனக்கு மிக வேண்டியவர், அவ்வாறே நானும் அவருக்கு" என்று தற்பெருமையுடன் பேசுவதனால் நட்பின் சிறப்பு குன்றிவிடும்.§