Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

படைச்செருக்கு

771. §

எம் எதிரிகளே எம் மன்னனக்கு எதிராகப் போர்புரியாது விடுக. அவ்வாறு துணிந்த பலர் இன்று சுடுகாட்டில் நடுக்கல்லாக நாட்டப்பட்டு நிற்கின்றனர்.§

772. §

காட்டு முயலைத் தாக்கிய அம்பை வைத்திருந்ததைவிட யானைக்கு வீசிக் குறி தவறிய வேலைத் தாங்கியது சிறப்புடையது.§

773. §

அஞ்சா நெஞ்சமே வீரம் என்று அழைப்பர். தோல்வியுற்றோருக்குக் கருணை காட்டுதல் வீரம் என்னும் வாளின் கூரிய ஓரமாகும்.§

774. §

போர்க்களத்தில் தாக்கிய யானை மீது கையிலிருந்த வேலை வீசிய வீரன் தன் மார்ப்பில் புதைந்த வேலைக் கண்டு களிப்புடன் இழுத்து எடுத்துப் பார்த்து மகிழ்வான்.§

775. §

பகைவனைச் சீற்றத்தோடு பார்த்த வீரனின் கண்கள், எதிரி தன் கை வேலை வீச இமைத்து விடுமாயின், அது புறங்காட்டி ஓடுதலை ஒக்கும்.§

776. §

அஞ்சா நெஞ்சப் போர் வீரன், தன் வாழ்நாளை மீள நோக்கும் போது களத்தில் தன்னுடலில் தழும்புகள் பெறாத நாள்களை வீணாகப் போன நாள்களுள் வைத்தெண்ணுவான்.§

777. §

நிலைத்து நிற்கும் புகழை விரும்பித் தன் உயிரையும் ஒரு பொருட்டாக மதிக்காத வீரனின் கால்களில் கழல் கட்டுதல் அவன் வீரத்தை மெச்சும் அணிகலனாகும்.§

778. §

போரில் உயிர் நீக்க அஞ்சா நெஞ்சம் உடையோரைக் களத்திற் செல்வதற்கு மன்னன் மறுத்தாலும் அவர் வீரம் குன்றுவதில்லை.§

779. §

தாம் செய்த சபதம் தவறாது மடியும் வீரரை, எவர்தான் தோல்வி அடைந்தவர் என உரைக்கத் துணிவர்?§

780. §

மன்னன் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு வீர மரணம் எற்படின், அது மீண்டும் இரங்கிப் பெற்று உயிர் மடியும் தகுதி உடையது.§