Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

தொழில் செய்யும் முறை

671. §

எவ்விடயத்திலும் ஒரு முடிவுக்கு வந்ததும் ஆராய்வு முடிய
வேண்டும். அம்முடிவைச் செயற்படுத்தலைத் தள்ளிப் போடல் குற்றமாகும்.
§

672. §

கால்ந் தாழ்த்திச் செய்யும் வேலையைக் காலம் தாழ்த்திச் செய்யலாம். விழிப்புடன் விரைவில் முடிக்கும் வெலையை ஒய்வின்றிச் செய்ய வேண்டும்.§

673. §

இயன்ற போதெல்லாம் உடன் செயலாற்றல் போற்றத் தக்கது.
அவ்வழி முடியாதாயின் வெற்றி ஈனும் பிற வழி தேடிக் கொள்க.
§

674. §

செய்து முடியாத தொழிலும் முற்றிலும் அழிக்காத பகைவரும்
அறவே அணைக்காத தீ போல் மீண்டும் வளர்ந்து அழிவைத் தருவன.
§

675. §

வேண்டிய பொருள், வழிவகை, காலம், இடம்,ஆற்றும் செயல் எனும் ஐந்தினையும் முதலிலேயே தீர ஆராய்ந்து பின் செயல் புரிக.§

676. §

ஒரு முயற்சியால் விழையும் முடிவு, இடையில் நேரும் இடர்ப்பாடு, இருதியில் வரும் பலாபலன்கள் என்பனவற்றை நுணுகி ஆராய்ந்து பின்பு செயலாற்றுக.§

677. §

தொழில் முறை நன்கு அறிந்து தேர்ந்த வல்லுனரிடமிருந்து அதற்கான உள்ளார்ந்த நுட்பங்களை உறுதிப் படுத்திக் கொள்வதே ஒருவன் அத்தொழிலை நிறைவேற்றுவதற்கான வழிமுறையாகும்.§

678. §

ஒரு மதயானையைப் பிறிதொரு யானையைக் கொண்டு பிடிப்பது போல் ஒரு முயற்சியைப் பிறிதொரு முயற்சியால் செய்து முடித்துக் கொள்க.§

679. §

நண்பர்களுக்கு நல்லுதவிகளைச் செய்யும்முன் நட்புறவு பிரிந்து சென்றவரை விரைந்து நண்பராக்கிக் கொள்வர்.§

680. §

தம் மக்கள் அஞ்சுவதை உணர்ந்து சிற்றரசர் பேரரசர்களைப் பணிந்து நண்பராக்கிக் கொள்வர்.§