Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

செங்கோன்மை

541. §

தீர ஆராய்ந்து எப்பக்கமும் பாரபட்சம் காட்டாது நடுவு நிலைமையிலிருந்து வழுவாது விதிக்கப்பட்ட சட்டப்படி தீர்வு கொடுத்தலே நீதி நெறியாகும்.§

542. §

ஞாலம் முழுவதும் மழையை நம்பி வாழ்வது போல் மக்கள் யாவரும் மன்னனின் செங்கோல் ஆட்சியை நம்பி வாழ்வர்.§

543. §

அந்தணர் இயற்றிய வேத நூல்களுக்கும் அவற்றில் கூறிய அறநெறிகளுக்கும் ஆதாரமாக அமைவது அரசனின் நீதி நெறிப்படியான ஆட்சியாகும்.§

544. §

தன் குடிமக்களை அன்புடன் தழுவி அறநெறிப்படி செங்கோல் செலுத்தும் பேரரசின் மன்னன் அடிகளை உலகமே போற்றி நிற்கும்.§

545. §

தன் குடைக்கீழ் நல்வழியில் செங்கோல் செலுத்தும் மன்னன் நாட்டில் பருவ மழை தப்பாது பயிர் விழைச்சலும் பெருகும்.§

546. §

மன்னன் செலுத்திவரும் கோணாத செங்கோல் மூலமன்றி வேலால் பெறப்படுவது அன்று வெற்றி.§

547. §

மன்னன் உலகம் எல்லாம் பாதுகாப்பான், ஆனால் அவனைக் கோணாத செங்கோலே பாதுகாக்கும்.§

548. §

முறைப்பாட்டுடன் வரும் மக்கள் நேர்முகம் காண்பதற்கு அரியவனாகி ஆராயாது நீதி வழங்கும் மன்னன் தன் தவறினால் தானே கெட்டுப் போவான்.§

549. §

மக்களைப் பிறர் துன்புறுத்தாது காப்பாற்றிச் செய்யுங் குற்றத்துக்குத் தண்டனை வழங்குதல் பழிக்குரிய பாவமாகாது. அது மன்னனுடைய கடமையாகும்.§

550. §

மன்னன் கொலைகாரப் பாதகர்களுக்கு சிரச்சேதத் தண்டனை விதித்தல் தோட்டக்காரன் வீண்களையை நீக்கி நற்பயிரை வளர்ப்பதற்கு ஒப்பாகும்.§