Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

சுற்றத்தாருடன் இணைந்திருத்தல்

521. §

ஒருவன் செல்வத்தை இழந்து வறியவனாயினும் அவன் உற்றார் உறவினர் மட்டுமே அவனோடு பழைய நட்புரிமை காட்டி வருவர்.§

522. §

ஒருவனுக்கு அன்பு சற்றேனும் குறையாத உற்றார் உறவினர் பொருந்துவராயின் அவனுடைய செல்வம் குன்றாது நிலைபெற்றிருக்கும்.§

523. §

கரை இல்லாத குளம் நீர் நிறைந்தால் வழிந்தோடும். அது அன்பால் அணைக்கும் சுற்றமில்லாதார் வாழ்க்கை போன்றது.§

524. §

ஒருவன் தன் உறவினர் தன்னைச் சூழ்ந்து வாழத்தக்க வகையில் ஒழுகுதலே அவன் செல்வத்தால் பெற்ற பெரும் பயனாகும்.§

525. §

தாராளமாகக் கொடுத்தும் இனிய சொல்லால் உரையாடியும் வரும் நற்பண்பு மிக்கவனின் உறவினர் அவனைச் சூழ்ந்து வாழ்வர்.§

526. §

கொடைவள்ளலாகவும் சற்றேனும் சினக்காதவனாகவும் ஒருவன் வாழ்வானாயின் அவனைப் போல் உறவினர் பெற்றிருப்பவர் இவ்வுலகில் வேறு யாருமில்லை.§

527. §

காகம் போல் காணும் உணவைத் தன் இனத்தோடு கலந்து பகிர்ந்து உண்ணும் குணமுள்ளவரிடமே செல்வம் நீங்காது நிலைத்திருக்கும்.§

528. §

மன்னவன் யாவரையும் பொதுப்பட ஒருதன்மையினராய்க் கணியாது அவரவர் தகுதிக்கு ஏற்பக் கணித்து வருவானாயின் அச்சிறப்பைக் கண்டு அவனைச் சூழ்ந்து பலர் வாழ்வார்.§

529. §

உளம் நொந்து பிரியும் உற்ற உறவினர், அவ்வாறு பிரிதற்குரிய காரணம் நீங்கியதும் தாமே வந்து கூடுவர்.§

530. §

தன்னோடு முன் இணைந்திருந்து பிரிந்தவன் பின் தகுந்த காரணத்துடன் திரும்பி வந்தால் அரசன் தீர ஆராய்ந்த பின்னே மீளவும் அவனுடன் தொடர்பு கொள்ளலாம்.§