Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பெரியாரைத் துணைக்கோடல்

441. §

தம்மிலும் மூத்த அறிவுள்ள பெரியார் திறமையைத் தெளிவாக உணர்ந்து அன்னாரின் நட்பைப் பெறுதல் வேண்டும்.§

442. §

இன்றுவரும் துன்பங்களைக் களைந்து நாளைவரும் துயரங்களிலிருந்து காப்பாற்றும் பெரியோர் நட்பைப் பெற்றுப் பேணுதல் வேண்டும்.§

443. §

அறிவாற்றல் மிக்க பெரியோர் நட்பைப் பெற்று அவர்களைத் தமக்குரியவராக்கிக் கொள்ளல் அரியனவற்றுள் எல்லாம் அரியது.§

444. §

தம்மிலும் பெரியாரோடு உறவு பூண்டு அவர் வழிப்படி நடப்பது மக்களின் வலிமைகளும் மிகச் சிறந்த வலிமையாகும்.§

445. §

அரசனின் அமைச்சரவை அவனுக்கு ஆட்சிபுரியக் கண்கள் போல் உதவுவதால் அவன் அவர்களை நுணுகி ஆய்ந்த பின்பே நியமித்தல் வேண்டும்.§

446. §

தக்கார் மத்தியில் மதிப்பும் நட்பும் பூண்டு வாழும் மன்னனுக்குப் பகைவரால் ஏற்படக் கூடிய துன்பங்கள் எவையுமில்லை.§

447. §

அரசனின் குற்றம் கண்டதும் கண்டித்து நேர்வழி காட்டுந் துணைவரையுடைய அரசனின் வல்லமையை அழிக்க வல்ல எதிரிகள் யாருளர்?§

448. §

குற்றங்களைக் கடிந்து பாதுகாப்பு வழங்குந் துணைவரற்ற அரசன் வேறு எதிரி எவரில்லை எனினும் அவன் தானே அழிந்து போவான்.§

449. §

மூலதனம் இல்லாத வணிகனுக்கு இலாபமில்லை. அதுபோல் நம்பிக்கையுள்ள நல்லவர் உறுதுணையாக இல்லாதவருக்கு நிலையான உறுதிப்பாடில்லை.§

450. §

பல்வேறு எதிரிகளை உண்டாக்குவதிலும் நல்லவரின் நட்பைக் கை விடுதல் பத்து மடங்கு கேடுதரும்.§