Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

ஆசை அறுத்தல்

361. §

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் முடிவின்றி வரும் பிறப்பிற்குக் காரணம் அவா எனும் வித்தாகும்.§

362. §

ஒருவன் விரும்பத்தக்கது பிறவியிலிருந்து விடுபடுதலே, அவ்விருப்பம் எதனையும் விரும்பாது விடுவதனால் கைகூடும்.§

363. §

இம்மையிலே எதனையும் விரும்பாமை போன்ற அருஞ் செல்வம் எதுவுமில்லை. மறுமையிலும் அதற்கொப்பானது வேறில்லை.§

364. §

எப்பொருள் மீதும் ஆசையின்மையே மனத் தூய்மை எனப்படும். மெய்பொருளை விரும்புவதாலேயே அவ்வாசையின்மை கைகூடும்.§

365. §

ஆசை நீக்கியோரே உண்மைத் துறவியர் ஆவர். ஏனையோர் ஆசை தவிர மற்றெல்லாவற்றையும் நீக்கியிருப்பினும் துறவியர் அல்லர்.§

366. §

எதனிலும் மேலாக ஒருவனை வஞ்சித்து ஏமாற்றுவது அவாவே, எனவே துறவியர் அதற்கு அஞ்சி ஒழுகுவர்.§

367. §

அவா தருஞ் செயல்களைத் துறவி அறவே தவிர்ப்பாராயின் அவர் வேண்டியவாறு வீடு பேறு கைகூடும்.§

368. §

ஒருவனுக்கு ஆசை இன்றேல் துன்பம் இல்லை. ஆயின் ஆசை இருப்பின் துன்பம் இடையறாது வந்து கொண்டிருக்கும்.§

369. §

துன்பம் மேற் துன்பம் தரும் ஆசையை அழித்தால் இம்மையிலும் நிலைத்த இன்பம் கிடைக்கும்.§

370. §

ஆசை என்பது ஒருபோதும் நிறைவுறாத இயல்புடையது. ஆசையை முற்றாக ஒருவன் நீக்கிய அக்கணமே நிரந்தர ஆனந்த நிறைவடைவான்.§