Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

துறவு

341. §

ஒருவன் எவ்வெப் பொருளினின்றும் பற்று நீக்கினானோ, அவ்வப் பொருளால் வரும் துன்பம் அவனுக்கு இல்லையாம்.§

342. §

இவ்வுலகில் உலகப்பற்றை முற்றாகத் துறந்தபின்பே பெருமகிழ்ச்சி உண்டாகும். இதனைப் பெற விரும்புவோர் இளமையிலே துறவு பூணுதல் வேண்டும்.§

343. §

ஐம்புலன்களை முற்றாக அடக்குதல் வேண்டும். அவற்றினால் வரும் பற்றுக்கள் யாவும் உடன் கை விடப்படல் வேண்டும். §

344. §

பரதேசிக்கு உடைமை எதுவுமே இல்லை, பற்று ஏதும் இருப்பின் அவன் மீண்டும் மாயை வலையிற் சிக்குவான்.§

345. §

மறுபிறவி தவிர்க்க முயல்பவனுக்குத் தன் உடம்பே பாரமாயிருக்க, அவன் அற்பமானவற்றில் ஈடுபாடு கொள்வது ஏனோ? §

346. §

நான் என்றும் எனது என்றும் என இருவகைப் பற்றை நீக்கியவன் தேவர்க்கும் மேலான வீட்டின்பம் பெறுவான்.§

347. §

பற்றுக்களைக் கை விடாமல் அவற்றில் ஈடுபாடு காட்டுபவனை அவற்றினால் வரும் துன்பங்கள் அவனை விடாது பற்றிக் கொள்ளும்.§

348. §

பற்றுக்களை முற்றும் துறந்தவர் உயர்வு மிக்க வீடு பேறடைவர். பற்றுச் சிறிதேனும் உள்ளவர் மீண்டும் பிறவி வலையிற் சிக்குவர்.§

349. §

பற்றுக்கள் யாவற்றையும் அறுத்திட பிறப்பு அற்று விடும். இன்றேல். பிறப்பு இறப்பால் வரும் நிலையாமை உணரப்படும்.§

350. §

உலகப் பற்றுகள் யாவற்றையும் அறுக்க வேண்டுமாயின், எவ்வகைப் பற்றுமில்லா இறைவனைப் பற்றுக.§