Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

புகழ்

231. §

இல்லாதவர்க்கு உதவி புரிந்து புகழ் வளர வாழ்க. வாழ்வில் அதனிலும் கூடிய பலன் தருவது எதுவுமில்லை.§

232. §

இரந்து வரும் வறியோர் மடியில் பிச்சை இடுபவரையே பலன் விரித்துரைப்போர் மெச்சிப் பாராட்டுவர்.§

233. §

பிறர் மெச்சும் புகழ் குன்றாது என்றென்றும் நிலைத்து நிற்பதைத் தவிர இவ்வுலகில் அழியாதது வேறு ஒன்றுமில்லை.§

234. §

இவ்வுலகிலே மனிதர் நற் புகழ் பெற்றிருந்தால் தேவருலகும் அவர்களையன்றி முனிவர்களைப் போற்றாதுவிடும்.§

235. §

செல்வம் இழந்தாலும் நற்பயன் அடைவதும், மரணமடைந்தும் அழிவில்லா நற்புகழ் அமைவதும் அறிவில் சிறந்தோர்க்கு மட்டுமே கிட்டும்.§

236. §

பிறப்பதெனில் ஒருவன் புகழுடன் உலகில் தோன்றுக. அவ்வாறு முடியாதார் பிறக்காமல் இருப்பதே நன்று.§

237. §

புகழ் பெற வாழத் தெரியாதவர் அது தம் குற்றம் என்று உணராது தம்மை இகழ்வார் மேல் குற்றங் காண்பதேன்.§

238. §

இறந்த பின்னும் நிலைக்கும் புகழைச் சிறிதேனும் பெறாதவர் உலகிற்கே இகழ்ச்சி எனக் கருதப்படுவர்.§

239. §

புகழ் படைக்கா மனிதரைத் தாங்க வேண்டியிருப்பின் குறை இல்லாதப் பலன்தரும் நில விளைவும் குன்றும்.§

240. §

பழிச்சொல்லின்றி வாழ்பவரே உண்மையில் வாழ்பவராவார். புகழ் இன்றி வாழ்பவர் வாழாதவரே ஆவார்.§