Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பிறம் கூறாமை

181. §

ஒருவன் அறச் செயல்கள் செய்யாது தீச்செயல்களைச் செய்பவனாயினும் புறங்கூறாது விடின் அவனை இன்னும் நல்லவன் எனலாம்.§

182. §

அறநெறியை மீறித் தீச் செயல் புரிவதைவிட பழிச் சொல் கூறிப் பின் நேர்முகங் காணும் போது புன்னகை புரிதல் இழிவானதாகும்.§

183. §

புறங்கூறிப் பாசாங்கு செய்து பிறரை இகழ்வோர் வாழ்தலினும் இறத்தலே பயன் தரும் என அறநூல் கூறும்.§

184. §

ஒருவன் முன் நின்று குறை கூறினும் அவன் பின் நின்று பின்விளைவு கருதாது பழி சொல்வதைத் தவிர்த்து விடுக.§

185. §

ஒருவனுடைய ஒவ்வொரு சொல்லும் இனியதாய் அறநெறிப்பட்டதாயினும் அற்பமான புறங்கூற்று அவனுடைய இழிவான உள்ளத்தைக் காட்டிவிடும்.§

186. §

மற்றையோரின் குறைகூறி வதந்தி பரப்புவானின் கேவலச் செயல் வெளிப்பட்டு எங்கும் பரவும்.§

187. §

உல்லாசமாக உரையாடி நட்பு வளர்க்கும் கலை தெரியாதவர்கள் பிளவு படுத்தும் நச்சுக்கதை சொல்லி நண்பர்களையும் பகைத்து விடுவர்.§

188. §

நண்பர் குறைகளையே எங்கணும் பரப்பும் மனப்பான்மையினர் மற்றையோர்க்கு எத்துணை துன்பம் விளைவிப்பர்.§

189. §

ஒருவன் சென்ற பின் பழி சொல்பவனின் பாரம் தாங்கும் பூமாதேவி அதனைப் பொறுத்தலும் அறநெறி எனக் கொள்கிறாள் போலும்.§

190. §

பிறர் குற்றங் காண்பது போல் தம் குற்றம் உணருவாராயின் மனிதர்க்கு யாது தீமையும் விளையுமோ?§