Tirukural

திருக்குறள்

வெஃகாமை

171. §

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
§

172. §

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
§

173. §

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
§

174. §

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
§

175. §

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
§

176. §

அருள்வெஃகி ஆற்றின்கன் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
§

177. §

வேண்டற்க வெஃகியான் ஆக்கம் விளையின்
மாண்டற் கரிதாம் பயன்.
§

178. §

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
§

179. §

அறனறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
§

180. §

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
§