Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

பொறுமை கொள்ளல்

151. §

பூமி அதனைத் கொத்தித் தோண்டுவதையும் தாங்குவது போல் தம்மை ஏளனம் செய்வோரைப் பொறுத்தல் மிக நன்று. §

152. §

தமக்குத் தீமை செய்வதைப் பொறுத்துக் கொள்வது என்றுமே நல்லது. அத்தீச்செயலை மறந்து விடுவது அதனிலும் நன்று.§

153. §

விருந்தினரை உபசரியாது திருப்பிவிடுதல் வறுமையிலும் வறுமையாகும். பிழை செய்தோர் மடைமையைப் பொறுப்பது வலிமையில் மிக வலிமையாகும்.§

154. §

தம் பெருமை என்றுமே மங்காதிருக்க வேண்டுவதை விரும்புவோர் பொறுமையைப் போற்றி ஒழுகுதல் வேண்டும்.§

155. §

பிறருக்குத் தீங்கு செய்பவர் மதிப்பற்றவர். ஆனால் தமக்குத் தீங்கு செய்தவரைப் பொறுப்பவர் பொன்போல் மதிக்கத்தக்கவர்.§

156. §

பழிவாங்குபவன் இன்பம் ஒருநாள் மட்டுமே நிற்கும். பொறுமையுள்ளோன் புகழ் கால முடிவு வரையும் நிலைக்கும்.§

157. §

நியாயமின்றி ஒருவன் தனக்குத் துன்பம் விளைத்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு அநீதியாகப் பழிவாங்குதலைத் தவிர்க்க வேண்டும்.§

158. §

தற்பெருமையால் தனக்குப் பிழைசெய்தாரையும் ஒருவன் தன் பொறுமையினால் வெற்றி கொள்ள வேண்டும்.§

159. §

தற்பெருமையால் பிழை செய்தவரைப் பொறுப்பவர் ஞானிகளின் பால் காணும் அரும் மனத்தூய்மை உடையவர்.§

160. §

விரதம் அனுட்டிப்பதனால் வரும் துன்பங்களைத் தாங்குபவர்கள் பெரியோர்களே. ஆயினும் அவர்கள் பிறர் கடுஞ் சொல்லால் வரும் துன்பத்தைப் பொறுப்பவர்களுக்குப் பிற்பட்டவர்களே.§