Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

அடக்கம் உடைமை

121. §

தன்னடக்கம் ஒருவனைத் தேவருள் ஒருவனாக உயர்த்திவிடும், அடக்கமின்மை அவனைக் கடும் தீய இருளில் தள்ளிவிடும்.§

122. §

தன்னடக்கத்திலும் சிறந்த செல்வம் வேறில்லை என்பதால் அதனைப் பெறுதற்கரிய பேறாகக் கருதிக் காக்கவேண்டும்.§

123. §

தன்னடக்கம் அறிந்து அவ்வழி செயலாற்றுவான் பேரறிஞரால்கண்ணியவானாய்க் கொள்ளப்பட்டுச் சிறப்படைவான்.§

124. §

இல்லற நிலையிற் தன்னடக்கம் பெயராதவன் மாட்சி மலையினும் மிகப் பெரியது.§

125. §

பணிவுடைமை எல்லோர்க்கும் விலைமதிப்பற்ற குணமாகும். எனினும் செல்வந்தர்களுக்கு அரியதொரு பெரும் பேறாகும்.§

126. §

ஒரு பிறப்பில் ஆமைபோல் ஐம்புலன் அடக்கி வாழ்வரேல் எழு பிறப்பிலும் பாதுகாப்பாய் அமையும்.§

127. §

எவரும் பேசுங்கால் நாவைக் காத்து அடக்கி கொள்க தவறின் தகாத சொற்கள் துயருந் துன்பமும் தரும்.§

128. §

பேசும் வழக்கில் ஒரு சொல் தீயதாகி விட்டாலும் நல்லன யாவும் அல்லனவாகி விடும்.§

129. §

தீயினாற் சுட்டபுண் சில நாளில் ஆறி விடும். ஆயினும் சுடுசொல்லால் விளையும் வடு என்றுமே ஆறாது.§

130. §

கற்பன கற்று வெகுளியை அடக்கி ஆளுபவன் விண்ணுலகம் வரும் வழியில் வரவேற்க அறக்கடவுள் காத்திருக்கும்.§