Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

இனியவை கூறல்

91. §

உண்மை உணர்ந்த அறவோர் வாயில் மனங் குழைந்து வஞ்சனை இல்லாத இனிய சொற்கள் வரும்.§

92. §

மனமகிழ்வுடன் கொடுக்கும் அன்பளிப்புகளிலும் உள்ளக்களிப்புடன் முகம் மலர்ந்து வழங்கும் இன்சொற்களே மிகவும் சிறந்தன.§

93. §

முகம் மலர்ந்து அன்போடு நோக்கி உளங்கனிய இனிய சொற்களால் உரையாடலே அறம் காட்டும் வழியாகும்.§

94. §

காண்போர் எவர்க்கும் மகிழ்விக்கும் சொல் வழங்குவார்க்கு வறுமையால் வரும் துன்பம் சாராது.§

95. §

பணிவும் இன்சொலும் காட்டுதல் ஒருவர்க்கு அணி, மற்று எவையும் அணியல்ல.§

96. §

நற்செயல் நோக்கி இன் சொல் கூறுபவனுக்கு அறம் பெருகும், மறம் தேயும்.§

97. §

நன்மை பயப்பதாய் பண்பின் நீங்காச் சொல் தெய்வீக அருளும் தலைசிறந்த அறநிலையும் தரும்.§

98. §

அற்பகுணம் சிறிதும் சாரா இனிய சொற்கள் இப்பிறவியில் மட்டுமன்றி மறுபிறவியிலும் இன்பம் தரும்.§

99. §

இன்சொல் இனிமை பயப்பது கண்டும் ஒருவன் கடும் சொல் வழங்குவது ஏனோ?§

100. §

இனிய சொல் பல இருக்கக் கடும் சொல் கூறல் கனிந்த பழம் கைமேலிருக்க கனியாக் காய் பறித்து உண்பது போல் ஆகும்.§