81. § | வீடமைந்து இல்வாழ்வு வாழ்தலும் பொருளீட்டலும் விருந்தினரை உபசரித்துப் பணிபுரிவதற்கேயாம்.§ |
82. § | விருந்தினர் வீட்டில் இருக்கவும் தன் உணவை மறைத்து உண்ணல் அது சாவா அமிர்தமாயினும் விரும்பத்தக்க முறை ஆகாது.§ |
83. § | தினமும் வருவிருந் தோம்புவான் வாழ்க்கை எக்காலத்தும் வறுமையால் துன்புற்று வருந்தாது.§ |
84. § | புன்முறுவலுடன் விருந்தினரை உபசரிப்பான் இல்லத்தில் திருமகள் மனமுவந்து என்றும் வாசம் செய்வாள்.§ |
85. § | விருந்தினரை உபசரித்துப் பின் எஞ்சியதைத் திருப்தியுடன் உண்பவனுடைய வயல் விதைக்காமலே பெருவிளைவு தரும்.§ |
86. § | செல்லும் விருந்தினரை வழியனுப்பி இன்னும் வரும் விருந்தினரை வரவேற்கக் காத்திருப்பவன் மறுமையில் விண்ணுலகத்தாரின் நல்விருந்தினனாவான்.§ |
87. § | விருந்தினருக்கு அளிக்கப்படும் கொடையின் பெறுமதி அதைப் பெறும் விருந்தாளியின் தகுதி கொண்டே கணிக்கப்படும்.§ |
88. § | விருந்தினருக்குத் தியாகம் என்றுமே செய்யாதோர் "செல்வத்தை மறைத்தோமே, ஏனையோருடன் நட்பிழந்திருந்தோமே, இப்போது எம்மைப் பேணுவாரில்லையே" எனப் பின் வருந்துவர்.§ |
89. § | பெரும் செல்வமிருந்து விருந்தோம்பல் தவிர்ப்பதே ஏழ்மையுள் ஏழ்மை, அறிவில்லா மூடர்களே அவ்வாறு செய்வர்.§ |
90. § | அனிச்சம் பூவோ முகந்தாலே வாடும், வரும் விருந்தினரின் மனமோ வெறுப்புடன் நோக்கவே வாடும்.§ |