Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

மக்கட் செல்வம்

61. §

ஒருவனுக்கு அரும் பேறாக வாய்ப்பது அறிவிற் சிறந்த மக்களே அப்பேற்றிலுஞ் சிறந்ததை நாம் அறிந்ததில்லை.§

62. §

பழி சேராப் பண்பு மிக்க பாலகரைப் பெறுவோர் ஏழு பிறவியிலும் பழி தீண்டப் பெறாதவராவர்.§

63. §

குழந்தைகளே ஒருவனுக்கு உண்மையான செல்வமாம் அம்மக்கள் அவரவர் ஊழ் வினைக் கேற்பவே வந்து வாய்ப்பர்.§

64. §

தம் குழந்தைகள் சிறு கையாற் பிசைந்து கூழ் தேவாமிர்தத்தினும் மிக இனியவாகக் கொள்ளப்படும். §

65. §

தம் குழந்தைகள் தம் மேனி தீண்டுவது உடற் கின்பம். அவர்கள் மழலைச் சொற் கேட்பது செவிக்கின்பம்.§

66. §

தம் குழந்தைகளின் மழலை மொழி கேட்டு அனுபவியாதவரே புல்லாங் குழலோசையும் யாழ் இசையும் இனியவை என்பர். §

67. §

தன் மகன் கற்றோர் அவையில் முன்வரிசையில் இருக்கத் தகுந்த கல்விமானாகச் செய்தலே மகனுக்குத் தந்தை செய்யும் கடமையாகும். §

68. §

தம்மிலும் தம்மக்கள் அறிவாளிகளென விளங்குவது கண்டு எம் மக்களும் எங்கும் மகிழ்வர். §

69. §

தன் மகன் கற்றுத்தேர்ந்து சான்றோனாயினான் எனக்கேட்ட தாய் அவனைப் பெற்ற பொழுதினும் பெரிதும் மகிழ்வாள்.§

70. §

"இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ இவன் தந்தை?" என உலகம் கேட்கச் செய்வதே மகன் தந்தைக்குச் செய்யும் பெருங் கடமையாகும்.§