Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

இல்வாழ்க்கை

41. §

நல்வழியில் நிற்கும் மாணவர், முதியோர், துறவியர் என்ற மூவரையும் ஆதரிப்போனே இல்வாழ்வான் எனப்படுவான்.§

42. §

துறவியர், மூதாதையர், வறியோர் என்னும் முத்திறத்தாரின் தேவைகளை அறவழி ஒழுகும் இல்வாழ்வான் ஆதரிப்பான்.§

43. §

பிதிரர், தெய்வம் ,விருந்தினர், உறவினர், தான் என்னும் ஐந்திறத்தாரையும் பேணுதலே இல்வாழ்வின் தலையாய கடன்.§

44. §

பழிக்குப் பயந்து பொருளீட்டியும் கஞ்சத்தனமின்றிப் பகிர்ந்தும் உண்பானுடைய செழிப்பு என்றும் குன்றாது.§

45. §

இல்வாழ்வில் அன்பும் அறனும் குழைந்திருப்பின் அதுவே அதன் சத்தும் கனியுமாகும்.§

46. §

இல்லற கடமைகளில் தேர்ச்சி பெற்றால் ஒருவன் துறவறம் பூண்டு பெறுவதற்கு வேறு யாது உளது ?§

47. §

இல்வாழ்க்கை வாழ்வாங்கு வாழ்வாரே வீடுபெற முயல்வாருள் தலையாயர் ஆவார்.§

48. §

இல்லறக் கடமைகளில் ஈடுபட்டுத் துறவியரைத் தவவழியிற் செல்ல உதவுபவன் அத்துறவியரிலும் அதிகம் சகித்துக் கொள்கிறான்.§

49. §

அறவாழ்வு என்பது இல்லற வாழ்வினையே. அதுபோல் துறவறமும் பிறர் பழிப்பில்லதாயின் நல்லதேயாம்.§

50. §

இல்வாழ்வை இம் மண்ணில் நலம்பட நடத்துபவர் விண்ணில் வாழுந் தேவருக்குச் சமமாகப் போற்றப்படுவார்.§