Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

மழையின் சிறப்பு

11. §

மழையினால் உலகம் அழிவின்றி வாழும். அவ்வாழ்வைத் தரும் மழையை வாழ வின் அமிர்தம் எனக் கருதுக.§

12. §

உண்பாருக்கு நல்லுணவை உண்டாக்கித் தானுமே உணவுகளில் ஒன்றுமாகின்றது மழை.§

13. §

உலகினைப் பெருங் கடல் நீர் சூழினும், திரண்ட மேகங்கள் பொய்ப்பின் பசிப்பிணி எனும் வெள்ளத்தே உலகமே மூழ்கிவிடும்.§

14. §

மழை வளங் கொழியா தாயின், உழவரும் கலப்பை கொண்டுழார்.§

15. §

அழிப்பதுவும் மழை, அழித்தவற்றை மீண்டும் கொழிக்கச் செய்வதும் மழை.§

16. §

விண்ணிலிருந்து மழைத்துளி வீழாதாயின் பூமியில் பசும்புல்லும் தலை காட்டாது.§

17. §

முகில்கள் கடல் நீரை முகந்து மீள மழையாய் வழங்காவிடின் விரிகடலும் தன்னியல்பில் குறைவுபடும்.§

18. §

வானம் மழையின்றி வரண்டால் பூமியில் தேவர்க்குத் திருவிழாவும் தினவழிபாடும் சுருங்கிவிடும்.§

19. §

விண் தன் கொடையை வழங்காதாயின் வள்ளல் தம் கொடைவளனும் தவசியர் தம் துறவறமும் இப்பேருலகுக்கு அருள்புரியா.§

20. §

நீரின்றி உலகில் ஓருயிரும் வாழாது இடையறா அந்நீரோட்டம் மழையின்றி நிலைபெறாது.§