Tirukural

இன்றைய தமிழில் திருக்குறள்

கடவுள் வாழ்த்து

1. §

"அ" என்பது ஏனை எழுத்துக்களுக்கு முதலும் மூலமும் ஆம்.
ஆதி பரம்பொருளும் உலகுக்கு முதலும் மூலமும் ஆனவர்.
§

2. §

முற்றறிவே வடிவான இறைவனுடைய பாதங்களை வழிபட இட்டுச் செல்லாத கல்வியால் பயனென்ன?§

3. §

உள்ளக் கமலத்தே எழுந்தருளியுள்ள இறைவனின் புனித பாதங்களை மனத்தால் சார்வோர் பூமியில் நீடுழிவாழ்வர்.§

4. §

விருப்பு வெறுப்பற்றான் பாதம் நண்ணி உலகில் துன்பமின்றி வாழ்க.§

5. §

விகாரமற்ற இறைவனுடைய மகிமையைப் போற்றுவோர்களை மாயை வழிவரும் நல்வினை தீவினைகள் சாரமாட்டா.§

6. §

புலனைந்தும் அடக்கி ஆளுகின்ற இறைவனின் நல்வழியை உறுதியாகப் பற்றுபவர்கள் நீண்டகாலம் மகிழ்வுடன் வாழ்வர்.§

7. §

ஒப்புயர்வற்ற இறைவனின் பாதங்களைச் சரண் அடைந்தவரே மனக் கவலையற்று வாழ்வர்.§

8. §

அறக்கடலாகிய கருணைவள்ளலின் திருப்பாதங்களைச் சரணடைந்தவரே வாழ்வின் பிற துன்பக் கடல்களையும் கடக்க வல்லார்.§

9. §

எண்குணத்தான் திருப்பாதங்களை வணங்காதார் தலை, புலனறிவிழந்த ஐம்பொறிகளைப் போல் பயனற்றது.§

10. §

இறைவனுடைய திருப்பாதங்களைச் சேர்ந்தவரே பிறவி எனும் பெருங் கடலை நீந்துவர், சேராதார் நீந்தார்.§