KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

image§

நன்றியுரை§

கிழக்குப் பல்கலைக்கழக கலைகலாசார பீடத்தின் இந்து நாகரிகத் துறையில் இந்து நாகரிக சிறப்புக்கற்கை நெறியின் ஒரு பகுதியை நிறைவு செய்யும் பொருட்டு “அமெரிக்க காவாய் இந்து ஆதீனம்” எனும் இவ்வாய்வினை மேற்கொள்வதற்கு பலர் பல வழிகளில் உதவி புரிந்துள்ளனர். அவர்களில் மிக முக்கியமாக எனது பெற்றோரான திரு.திருமதி.சண்முகம் கலைச்செல்வி அவர்களுக்கும், எனது மூத்த சகோதரரான ச.சுரேஸ்குமார் அவர்களுக்கும் முதற்கண் நன்றியினை தெறிவித்துக் கொள்கின்றேன்.§

எனது ஆய்வுக் கட்டுரையின் தலைப்பினைத் தெரிவு செய்யவும், அதனை ஏற்றுக் கொண்டு எனது ஆய்வினைச் சிறப்பாகத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அனுமதி மற்றும் ஆலோசனை வழங்கியும், இவ்வாய்விற்கு வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து, தவறுகளைச் சுட்டிக்காட்டியும் இவ்வாய்னை மேற்கொள்ள பெரிதும் உதவிய இவ்வாய்விற்குரிய மேற்பார்வையாளரும், இந்துநாகரிகத் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான திருமதி சாந்தி கேசவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.§

பல அறிவுரைகளை அவ்வப்போது வழங்கியும், ஆய்வின் போது ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்தும், வேண்டிய போது இவ்வாய்விற்கான அத்தியாயத் தலைப்புக்களை பாகுபடுத்தி தந்தும், சிரமத்தை பாராது ஆலோசனைகளை வழங்கி உதவி புரிந்த சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ச.முகுந்தன் அவர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.§

மேலும் இவ்வாய்விற்கு ஆலோசனைகளை வழங்கிய விரிவுரையாளர் திரு. நா.வாமன் அவர்களுக்கும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களுக்கும், தென் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. ந.சுபராஜ் அவர்களுக்கும், அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவரான ஆறு.திருமுருகன் அவர்களுக்கும், மட்/கரடியனாறு மஹா வித்தியாலயத்தின் ஆசிரியரான திரு. வ.குணபாலசிங்கம் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.§

அத்துடன் தரவுகளை மொழிபெயர்ப்பு செய்வதற்கு உதவிய நண்பர்களான பெ.கஜன்குமார், சு.டசினா, உ.டினேஸ்குமார் ஆகியோருக்கும் ,எனது ஆய்வினைப் பூர்த்தி செய்வதற்கு பல வழிகளில் உதவிய யு.ஹார்த்திகாயினி, க.செல்வகுமார், ம.மதிபன் ஆகியோருக்கும், எனது சகோதரர்களான ச.மேகராஜா, ச.கவிதா ஆகியோர்களுக்கும், மற்றும் என்னை ஆர்வமூட்டிய ஏனைய நண்பர்களுக்கும், ஆய்வுத் தரவுகளை இணையதளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்தியிருந்த ஹவாய் இந்து ஆதீனத்தினருக்கும், நூல் வடிவம் கொடுத்த அச்சகத்தினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.§

~ ஆய்வாளர்§